கர்நாடகா, மங்களூரு மாவட்டத்தை
சேர்ந்தவர், மோகன் குமார், 46. அங்குள்ள பள்ளியில், தற்காலிக உடற்பயிற்சி
ஆசிரியராக பணியாற்றி வந்தார். 2003ல் வேலையை ராஜினாமா செய்தார். இதன் பின்,
சட்ட விரோத செயல்களில் ஈடுபட துவங்கினார்.
பெண்களை ஏமாற்றி, பஸ் நிலைய
கழிப்பறைகளில், சயனைடு கொடுத்து அவர்களை சாகடிப்பது, இவரின் ஸ்டைல். இது
போல், 20 பெண்களை, சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளார். இதில், அனிதா,
லீலாவதி, சுனந்தா ஆகிய மூன்று பேரை, பாலியல் பலாத்காரம் செய்த பின், சயனைடு
கொடுத்து கொலை செய்துள்ளார். இச்சம்பவங்கள், 2005 முதல், 2009 வரை
நடந்துள்ளது. விசாரணை நடத்திய போலீசார், மோகனை கைது செய்தனர். மங்களூரு
நான்காவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில், விசாரணை நடந்தது.
கடந்த வாரம், குற்றம் நிரூபிக்கப்பட்டது.
நீதிபதி நாயக், தீர்ப்பில் கூறியதாவது:
இவ்வழக்கு,
மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு. இதில், குற்றவாளிக்கு மன்னிப்பு
வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிக பட்ச தண்டனையான, தூக்கு தண்டனை
விதிப்பதே சரியானது. விசாரணையின் போது, தான் தவறு செய்ததற்காக, அவர்,
வருந்தவில்லை. பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவர், தன் பணிக்கு மரியாதை
கொடுக்கவில்லை. இவர் செயல்பட்ட முறையை பார்த்தால், திட்டமிட்டே கொலை
செய்து, திருமணமாகாத மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்
என்பது தெரிகிறது. இவ்வாறு, நீதிபதி,தெரிவித்தார்.
Comments