- டெல்லியில் விஐபி கலாச்சாரம் என்பது நிறுத்தப்பட வேண்டும். எந்த ஒரு
எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் அதிகாரியும் சிவப்பு சுழல் விளக்கு காரில்
பயணிக்க கூடாது. அதேபோல் ஆடம்பர பங்களாக்களில் வசிப்பதும் சிறப்பு
பாதுகாப்பு கோருவதும் கூடாது.
- அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால் மசோதாவை அப்படியே நிறைவேற்ற
வேண்டும்.
- ஒவ்வொரு காலனி உட்பட அனைத்து நிலைகளிலும் மொஹல்லா சபாக்கள்
உருவாக்கப்பட்டு அவையே தீர்மானிக்க வேண்டும்.
-டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
-டெல்லியில் செயல்படும் அனைத்து மின்சார நிறுவனங்களும்
தணிக்கைக்குட்படுத்தப்பட வேண்டும். அப்படி உட்படுத்திக் கொள்ள தயாராக
இல்லாத நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து.
-மின்சார மீட்டர்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
-ஒருநாளைக்கு 220 லிட்டர் நீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?
-ஒழுங்குபடுத்தாத காலனிகள் முறைப்படுத்துதல் அவசியம்.
-குடிசைவாழ் மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
-தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட வேண்டும்.
-ஒவ்வொரு சாதாரண வர்த்தகருக்கும் சாலைகள், மின்சாரம், நீர் போன்ற அடிப்படை
வசதிகள் செய்ய வேண்டும்.
-சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்க்கிறோம்.
-கிராமப்புற விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய
வேண்டும்.
-500 அரசு பள்ளிகள் திறப்பது, தனியார் பள்ளிகளுக்கான நிதி உதவியை
நிறுத்தல் , கட்டண முறையை பகிரங்கப்படுத்தல்
-நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் திறப்பது
-பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுக்களள் அமைத்தல்
-அனைத்து வழக்குகளையும் 6 மாத காலத்துக்குள் தீர்வு காணும் வகையில்
நீதித்துறை மேம்பாடு
-இந்த பிரச்சனைகளில் டெல்லி மாநாகராட்சியின் ஒத்துழைப்பு எப்படியானதாக
இருக்கும்?
ஆகிய பிரச்சனைகள் குறித்த நிலைப்பாட்டை கேட்டு அக்கடிதம் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
Comments