பா.ஜ., பிரதமர் வேட்பாளர்:அந்த லாரிகளை, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பழைய கலப்பை, கொழு:அக்டோபர், 31ம் தேதி, படேல் சிலைக்கு அடிக்கல் நாட்டிய மோடி, இரும்பு மற்றும் மண் சேகரிப்பதற்காக, நேற்று முன்தினம், 1,000 லாரிகளை, நாடு முழுவதும் அனுப்பி வைத்தார்.கிராமங்களில், விவசாயிகள் பயன்படுத்திய, இரும்பால் ஆன, பழைய, கலப்பை, கொழு போன்றவற்றையும், அந்தந்த பகுதி மண்ணை சேகரிக்கவும், அந்த லாரிகளில், மூன்று லட்சம், வெற்று பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், இரும்பு மற்றும் மண் சேகரிக்கப்படும்.சர்தார் படேல் சிலை அமைப்பு குறித்த விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும், 1.75 லட்சம் பள்ளிகளில், மாணவர்களுக்கு, கட்டுரை எழுதும் போட்டியும் நடத்தப்படுகிறது.
Comments