எந்த தைரியத்தில் அப்படி சொல்கிறீர்கள்? என்றால், படம் நன்றாக வந்திருக்கிற தைரியத்தில் தான் அப்படி சொல்கிறேன் என்கிறார். தொடர்ந்து நான் நடிக்கிற படங்கள் தோல்வியடைந்து வந்தநேரம் தான் சசீந்திரனிடம், பாண்டியநாடு கதையைக் கேட்டேன். கதையில் வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்கள் இருந்தது. அதனால்தான், ஹிட் உறுதி என்று நானே தயாரிப்பாளராகவும் பிள்ளையார் சுழி போட்டேன்.
மேலும், அஜீத், கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வந்தாலும், எனது படமும் வெற்றி பெறும் என்பதை இப்போதே என்னால் அடித்து சொல்ல முடியும்.அதனால் யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. எனது பாண்டியநாடு வெற்றி பெறப்போவது உறுதி என்கிறார் சிக்ஸ்பேக் நாயகன் விஷால்.
Comments