
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கரை
தமது தூதராக நியமித்திருந்ததை இந்திய விமானப் படை தற்போது
கைவிட்டிருக்கிறது.
2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனாக
சிறப்பிக்கப்பட்டார். குரூப் கேப்டன் பதவி என்பது விளையாட்டுத்
துறையினருக்கான கெளரவ பதவியாகும். விளையாட்டுத் துறையைச் சேர்ந்த
டெண்டுல்கருக்குத்தான் முதலில் குரூப் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது.
டெண்டுல்கர் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில்
இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். 200வது டெஸ்ட் போட்டியை ஜனவரி
மாதம் எதிர்கொள்கிறார்.
இந்நிலையில் டெண்டுல்கரை தமது தூதராக நியமித்திருந்ததை இந்திய விமானப் படை
கைவிட்டிருக்கிறது. டெண்டுல்கர் அனேகம் விரைவில் கிரிக்கெட் போட்டிகளில்
ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகி
இருக்கிறது.
Comments