அவருக்கு துணையாக அவரது பெற்றோர், மனைவி சூசன் மற்றும் சகோதரி சுஹானா
ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். ரித்திக் இன்னும் 48 மணி நேரத்தில்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று அவரது தந்தை ராகேஷ் ரோஷன்
தெரிவித்தார்.
முன்னதாக அவர் நேற்று மாலை தனது மகன்கள் 2 பேரிடமும் தனக்கு அறுவை சிகிச்சை
நடக்கவிருக்கிறது என்றும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும்
கூறியுள்ளார்.
உடல் நலம் சரியில்லாததால் தான் ரித்திக் அண்மை காலமாக பொது நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்ளவில்லை. முன்னதாக அவருக்கு பாங் பாங் படப்பிடிப்பின்போது
தலையில் அடிபட்டது. இதையடுத்து தான் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments