விஸ்வரூபம்-2...
தற்போது, முதலில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்தில் நீளம் கருதி
வெட்டப்பட்ட காட்சிகளோடு மேலும் சில காட்சிகளைப் படமாக்கி விஸ்வரூபம்-2வை
உருவாக்கி வருகிறார் கமல்.
விளம்பரங்களுக்காக படமெடுக்கவில்லை...
விஸ்வரூபம்-2 குறித்து கமல் கூறியதாவது, ‘வீண் விளம்பரங்களுக்காக நான்
படமெடுக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கருத்தை சொல்லவே நான் முயல்கிறேன்.
பொதுவாக, முதல் பாகம் வெறி பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகே, அடுத்த பாகம்
குறித்து ஆலோசிப்பார்கள். ஆனால் நான் அப்படியல்ல.
திட்டமிட்ட ஒன்று தான்...
முதல் பாக வேலைகளுக்கு முன்னதாகவே, இரண்டாம் பாகத்தின் வேலை குறித்தும்
செயல் படத் தொடங்கி விட்டேன். விஸ்வரூபம் கதையே இரண்டு பாகங்களாக தயார்
செய்யப்பட்ட ஒன்று தான்.
உஷாராயிட்டேன்...
இப்படத்தின் முதல் பாகம் பலப் பிரச்சினைகளைச் சந்தித்ததால், நான் இப்போது
உஷாராகவே இருக்கிறேன். எனவே, இரண்டாம் பாகத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்களை
அதிகம் பேசாமல், ரொமாண்டிக்காக இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
அதி நவீன படைப்பு...
டெக்னிக்கலாகவும் அதி நவீனமாகவும் படமாக்கி வருகிறோம். தண்ணீருக்கடியில்
கூட நிறைய காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
Comments