முதல் பாகம் அமெரிக்காவிலும் ஆப்கானிஸ்தானிலும் நடப்பதாகக்
காட்டியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகம் முழுக்க இந்தியாவிலேயே நடக்கிறது.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார் கமல்ஹாஸன்.
உடனுக்குடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடித்து வருகிறார். இதுவரை படம்
குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த கமல், முதல் முறையாக
படத்தின் தமிழ் மற்றும் இந்தி போஸ்டர்கள் மற்றும் டிசைன்களை
வெளியிட்டுள்ளார்.
'இந்த இரண்டாம் பாகத்தை கமல் தயாரிக்கவில்லை. ஆஸ்கர் பிலிம்ஸ்
தயாரிக்கும்', என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது கமலின் ராஜ்கமல்
நிறுவனம் அளிக்கும் விஸ்வரூபம் 2 என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்பாகத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களே இந்த
இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர்.
Comments