2 ஜி வழக்கு: சட்ட விதி மீறலில் கம்பெனிகள் ? ரூ.3 ,805 கோடிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் வெளிநாட்டு பண பரிமாற்றம் நடந்த போது முறையான சட்ட விதிகள் பின்பற்றபட்டனவா ? இது குறித்து முறையான கணக்கு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு வருவாய் அமலாக்க துறையில் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ரூ. 3 ஆயிரத்து 805 கோடி வரை பரிமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையில் அமலாக்க துறையினர் களம் இறங்கி விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை 2 ஜி வழக்கிற்கு பெரிதும் உதவும் என தெரிகிறது.

மத்திய தொலை தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதியப்பட்டு விசாரணை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கின் மற்றொரு நடவடிக்கையாக வருவாய் அமலாக்க துறையினர் இதில் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதன்படி மும்பையில் உள்ள டி. பி., ரியலிட்டி லிமிட்டெட் 2 ஆயிரத்து 831 கோடி, , டில்லியில் உள்ள லூப் டெலிகம் லிமிடெட் ( 549 கோடி ) ,மும்பையில் உள்ள லூப் மொபைல் இந்திய லிமிடெட் ( 26 கோடி ) , சென்னையில் உள்ள ஈட்டா ஸ்டார் டெவலப் பிராப்பர்ட்டி பிரைவேட் லிமிடெட் 399. 50 கோடி, உள்ளிட்டவை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

Comments