மாலை நேரத்தில் பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு கொஞ்சம்
வித்தியாசமாக செய்து கொடுக்க நினைத்தால், அப்போது அவர்களுக்கு பிரட்டை
வைத்து குலாப் ஜாமூன் போல் செய்து கொடுக்கலாம். இப்போது அதை எப்படி
செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பால் - சிறிது
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை உதிர்த்து, அதை பாலால் சற்று பிசைந்து கொண்டு உருட்டிக் கொள்ளவும்.
பின்
ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்
வைத்துள்ள பிரட் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக்
கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை
ஊற்றி சர்க்கரையை போட்டு, பாகு போன்று காய்ச்சி, ஏலக்காய் சேர்த்து
இறக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த பாகுவில் பொரித்து வைத்துள்ள, பிரட் உருண்டைகளை சேர்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் பரிமாறவும்.
இப்போது சுவையான பிரட் ஜாமூன் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமென்றால் பிரட் துண்டுகளை வேண்டிய வடிவத்தில் வெட்டி, எண்ணெயில் பொரித்து, சர்க்கரை பாகுவில் போடலாம்.
Comments