சிட்னி: மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஆஸ்திரேலியாவில் வசித்தால் அவருக்கு
பிரதமர் பதவி கூட அளியுங்கள். ஆனால் அவர் வசிப்பதே இந்தியாவில் .இது
சச்சினுக்கு “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்ற ஆஸி.,
பிரதமர் ஜூலியா கில்லார்டின் அறிவிப்புக்கு அந்நாட்டின் முன்னாள்
கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடனின் கருத்து அல்ல எரிச்சல்
அரசுமுறை பயணமாக இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு,
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின்
உயரிய விருதான “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்று
அறிவித்தார். இதற்கு இந்தியாவில் வரவேற்பும் ஆஸ்திரேலியாவில் கடும்
எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ரேடியோ
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ
ஹைடன், தன்னைப் பொறுத்தவரையில் “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது
ஆஸ்திரேலியர்களுக்கு மட்டுமே. சில விஷயங்கள் நமது நாட்டிற்கு மட்டுமே
உரியது. சச்சினைப் பொறுத்தவரையில் அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில்
சந்தேகமில்லை. அவர் மட்டும் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்திருந்தால் அவருக்கு
பிரதமர் பதவியே கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவில் அல்லவா
வசிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா
மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு எனது சிட்னி வீட்டில்
விருந்தளித்ததை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ள அவர்,
ஆஸ்திரேலியர்களால் சச்சின் மிகவும் விரும்பப்படுபவராகவும் இருக்கிறார்
என்று தெரிவித்துள்ளார்.
Comments