காவிரியில் திடீரென நேற்று நள்ளிரவு காவிரி நீர்
திறந்துவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி
நீரைத் திறந்துவிடக் கூடாது
என்பதை வலியுறுத்தி பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில்
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், உச்சநீதிமன்ற
உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறமுடியாது.
3 நாட்களுக்கு மட்டும்தான் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து
விடப்படும். இதனால் கர்நாடக விவசாயிகள் அமைதிகாக்க வேண்டும். இன்னும் 3
நாட்களில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்றார்
அவர்.
Comments