கருணாநிதியின் 89-வது பிறந்த நாள்: கடந்த முறை சிறையில், இம்முறை சென்னையில் கனிமொழி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் விழா இன்று அக்கட்சியினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
சென்னையில் இன்று காலை தமது இல்லத்தில் கேக் வெட்டி தமது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கருணாநிதி கொண்டாடினார். பின்னர் அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து சிஐடி நகரில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்ட கருணாநிதி பின்னர் அண்ணா அறிவாலயம் வந்து தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். திமுக முக்கிய பிரமுகர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்திருதார். தமிழக ஆளுநர் ரோசய்யாவும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். தமிழகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிந்து கருணாநிதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கருணாநிதியின் 89-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையாக 89 வகையான இனிப்புகள், தென்னம்பிள்ளைகள் என விதம்விதமான பரிசுப் பொருட்கள் கருணாநிதிக்கு வழங்கப்பட்டன.
கடந்த பிறந்த நாளின் போது கருணாநிதியின் மகள் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கனிமொழியும் இன்றைய கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் 89-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை தமது இல்லத்தில் கேக் வெட்டி தமது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கருணாநிதி கொண்டாடினார். பின்னர் அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து சிஐடி நகரில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்ட கருணாநிதி பின்னர் அண்ணா அறிவாலயம் வந்து தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். திமுக முக்கிய பிரமுகர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்திருதார். தமிழக ஆளுநர் ரோசய்யாவும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். தமிழகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிந்து கருணாநிதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கருணாநிதியின் 89-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையாக 89 வகையான இனிப்புகள், தென்னம்பிள்ளைகள் என விதம்விதமான பரிசுப் பொருட்கள் கருணாநிதிக்கு வழங்கப்பட்டன.
கடந்த பிறந்த நாளின் போது கருணாநிதியின் மகள் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கனிமொழியும் இன்றைய கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் 89-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
Comments