புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணிக்குழு: மேலும் 9 பேரை அறிவித்தார் ஜெ!
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள
பணிக்குழுவில் மேலும் 9 பேர் இடம்பெறுவர் என்று அதிமுக பொதுச்செயலாளர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 12-ந் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.
ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. தி.மு.க.வின் நிலைப்பாடு மே 17-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற 32 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேர் கொண்ட குழுவை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் பணிக்குழுவில் மேலும் 9 பேர் இடம் பெறுவர் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா அறிவித்துள்ள கூடுதல் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்
இ.மதுசூதனன் (அவைத் தலைவர்),
டாக்டர்.மு.தம்பிதுரை, எம்.பி. (கொள்கை பரப்புச் செயலாளர்,)
டாக்டர்.பி.வேணுகோபால், எம்.பி. (மருத்துவ அணிச் செயலாளர்)
கே.கே.கலைமணி (மீனவர் பிரிவுச் செயலாளர்),
ஆர்.கமலகண்ணன் (ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்),
எம்.ரெங்கசாமி, எம்.எல்.ஏ. (தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர்),
மா.ரவிச்சந்திரன் (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்),
கே.ஆர்.முருகானந்தம் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்),
ஏ.வில்லியம் ரபி பெர்னார்ட், எம்.பி.
இதன் மூலம் புதுக்கோட்டை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்ற அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிககுழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 12-ந் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.
ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. தி.மு.க.வின் நிலைப்பாடு மே 17-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற 32 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேர் கொண்ட குழுவை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் பணிக்குழுவில் மேலும் 9 பேர் இடம் பெறுவர் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா அறிவித்துள்ள கூடுதல் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்
இ.மதுசூதனன் (அவைத் தலைவர்),
டாக்டர்.மு.தம்பிதுரை, எம்.பி. (கொள்கை பரப்புச் செயலாளர்,)
டாக்டர்.பி.வேணுகோபால், எம்.பி. (மருத்துவ அணிச் செயலாளர்)
கே.கே.கலைமணி (மீனவர் பிரிவுச் செயலாளர்),
ஆர்.கமலகண்ணன் (ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்),
எம்.ரெங்கசாமி, எம்.எல்.ஏ. (தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர்),
மா.ரவிச்சந்திரன் (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்),
கே.ஆர்.முருகானந்தம் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்),
ஏ.வில்லியம் ரபி பெர்னார்ட், எம்.பி.
இதன் மூலம் புதுக்கோட்டை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்ற அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிககுழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
Comments