சென்னை : "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க எந்த விதியும் ஒரு தடையாக இல்லை; அரசியல் ஒற்றுமை மற்றும் துணிச்சல் மட்டுமே இதற்கு தேவை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலை பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உரத்த கோரிக்கை அர்த்தமற்றது, தேவையற்றது என மத்திய அமைச்சர் சிதம்பரம் அலட்சியமாகவும், ஒட்டுமொத்தமாகவும் ஒதுக்கித் தள்ளியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்த கருத்து தன்னுடைய சொந்தக் கருத்து அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஒட்டுமொத்த கருத்து என்பது பார்லிமென்டுக்கு வெளியே நின்று கொண்டு சிதம்பரம் கூறி இருப்பதிலிருந்தே புரிகிறது. கூட்டுக்குழுவின் விசாரணையை மறுத்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளதும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.மத்திய அரசே சிக்கித் தவிக்கும் இப்பிரச்னையில் எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்காததை பிரதிபலிக்கும் விதமாக மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது.இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்னையை, பொதுக் கணக்குக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுவது என்பது பார்லிமென்ட் நடைமுறையில் சாதாரணமாக கடைபிடிக்கப்படும் வழக்கம்.
ஆனால், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் ஊழல் என்பது சாதாரண ஒன்றல்ல. பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை மட்டுமே சரியானதாக இருக்கும்.பொதுக் கணக்கு குழுவின் எல்லை சில வரையறைகளுக்கு உட்பட்டது. கணக்கு வழக்குகளில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின், அதை மட்டுமே பொதுக் கணக்குக் குழுவால் பரிசீலிக்க இயலும். வழக்கு தொடர்வதற்கான பரிந்துரையை பொதுக் கணக்கு குழுவினரால் செய்ய இயலாது. முறையான மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய பார்லிமென்ட் கூட்டுக்குழுவினரால் மட்டுமே முடியும்.பொதுக்கணக்கு குழுவை விட பார்லிமென்ட் கூட்டுக்குழு என்பது மூத்த பார்லிமென்ட் உறுப்பினர்களையும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அதிக பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு. அரசு அதிகாரிகளை மட்டுமல்லாமல் இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரையும் விசாரணைக்கு அழைக்கக் கூடிய அதிகாரம் பார்லிமென்ட் கூட்டுக் குழுவிற்கு மட்டுமே உண்டு.
பிரச்னையின் முக்கியத்துவத்தையும், ஊழலின் அளவையும் வைத்துப் பார்க்கும் போது, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க எந்த விதியும் தடையாக இல்லை. அரசியல் ஒற்றுமை மற்றும் துணிச்சல் ஆகியவை மட்டுமே இதற்குத் தேவை. இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை குறித்து பொதுக்கணக்குக் குழு விசாரித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை காத்திருப்பது என்பது தாமதப்படுத்தும் செயல்.தி.மு.க.,வை தவிர, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய கைகள் சுத்தம் என்பதில் தெளிவாக இருந்தால், ஏன் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பார்களேயானால், அவர்களுக்கும் இந்த சுரண்டலில் பங்கு இருக்கிறது என்ற முடிவுக்குத்தான் மக்கள் வர வேண்டியிருக்கும். அம்மாதிரி இருக்கும் பட்சத்தில் இந்த ஆபத்து தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்திற்கும் கூட.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலை பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உரத்த கோரிக்கை அர்த்தமற்றது, தேவையற்றது என மத்திய அமைச்சர் சிதம்பரம் அலட்சியமாகவும், ஒட்டுமொத்தமாகவும் ஒதுக்கித் தள்ளியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்த கருத்து தன்னுடைய சொந்தக் கருத்து அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஒட்டுமொத்த கருத்து என்பது பார்லிமென்டுக்கு வெளியே நின்று கொண்டு சிதம்பரம் கூறி இருப்பதிலிருந்தே புரிகிறது. கூட்டுக்குழுவின் விசாரணையை மறுத்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளதும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.மத்திய அரசே சிக்கித் தவிக்கும் இப்பிரச்னையில் எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்காததை பிரதிபலிக்கும் விதமாக மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது.இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்னையை, பொதுக் கணக்குக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுவது என்பது பார்லிமென்ட் நடைமுறையில் சாதாரணமாக கடைபிடிக்கப்படும் வழக்கம்.
ஆனால், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் ஊழல் என்பது சாதாரண ஒன்றல்ல. பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை மட்டுமே சரியானதாக இருக்கும்.பொதுக் கணக்கு குழுவின் எல்லை சில வரையறைகளுக்கு உட்பட்டது. கணக்கு வழக்குகளில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின், அதை மட்டுமே பொதுக் கணக்குக் குழுவால் பரிசீலிக்க இயலும். வழக்கு தொடர்வதற்கான பரிந்துரையை பொதுக் கணக்கு குழுவினரால் செய்ய இயலாது. முறையான மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய பார்லிமென்ட் கூட்டுக்குழுவினரால் மட்டுமே முடியும்.பொதுக்கணக்கு குழுவை விட பார்லிமென்ட் கூட்டுக்குழு என்பது மூத்த பார்லிமென்ட் உறுப்பினர்களையும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அதிக பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு. அரசு அதிகாரிகளை மட்டுமல்லாமல் இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரையும் விசாரணைக்கு அழைக்கக் கூடிய அதிகாரம் பார்லிமென்ட் கூட்டுக் குழுவிற்கு மட்டுமே உண்டு.
பிரச்னையின் முக்கியத்துவத்தையும், ஊழலின் அளவையும் வைத்துப் பார்க்கும் போது, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க எந்த விதியும் தடையாக இல்லை. அரசியல் ஒற்றுமை மற்றும் துணிச்சல் ஆகியவை மட்டுமே இதற்குத் தேவை. இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை குறித்து பொதுக்கணக்குக் குழு விசாரித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை காத்திருப்பது என்பது தாமதப்படுத்தும் செயல்.தி.மு.க.,வை தவிர, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய கைகள் சுத்தம் என்பதில் தெளிவாக இருந்தால், ஏன் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பார்களேயானால், அவர்களுக்கும் இந்த சுரண்டலில் பங்கு இருக்கிறது என்ற முடிவுக்குத்தான் மக்கள் வர வேண்டியிருக்கும். அம்மாதிரி இருக்கும் பட்சத்தில் இந்த ஆபத்து தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்திற்கும் கூட.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Comments