திண்டிவனம் : ""பா.ம.க., தனித்து நின்று வெற்றி பெறும் வகையில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் 700 பேர் பங்கேற்றனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க., - அ.தி.மு.க., நம்மை அழைக்கின்றன. 50 சட்டசபை தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் நாம் தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வகையில், கட்சியைப் பலப்படுத்த வேண்டும். கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.குறிப்பாக பா.ம.க., பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டினால் வன்னியர்களுக்கு கிடைத்த பயன் குறித்து விளக்க வேண்டும். நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம். நாம் நிச்சயம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக நீங்கள் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் 700 பேர் பங்கேற்றனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க., - அ.தி.மு.க., நம்மை அழைக்கின்றன. 50 சட்டசபை தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் நாம் தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வகையில், கட்சியைப் பலப்படுத்த வேண்டும். கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.குறிப்பாக பா.ம.க., பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டினால் வன்னியர்களுக்கு கிடைத்த பயன் குறித்து விளக்க வேண்டும். நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம். நாம் நிச்சயம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக நீங்கள் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
Comments