சென்னை: சென்னையில் கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் கனம மழை பெய்து வருகிறது. ஏனைய இடங்களில் குளிர்ச்சியான சூழல் உள்ளது. வடகிழக்கு பருவமழையால் தீவிரமடைந்ததால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தில் சென்னையில் வெளுத்த மழை தற்போது ஓய்வெடுத்தது.
இந்நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சென்னையில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இன்று மாலை வியாசர்பாடி, பெரம்பூர், சௌகார்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இரவில் கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், முகப்பேர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
Comments