தினமலர் செய்தி : ஐ.நா: ஐ.நா.,வில் இந்தியா முன்மொழிந்த சர்வதேச யோகா தினத்தை 47
பாகிஸ்தான் உட்பட 47 முஸ்லிம் நாடுகள் கடைப்பிடித்தன. ஐ.நா.,வில் இந்த
தீர்மானத்தை சில இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் ஆதரிக்காத போதும்,
பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், மலேஷியா, துபாய், அபுதாபி உட்பட
பல நாடுகளிலும் நகர்களிலும் யோக தின கொண்டாட்டத்தில் முஸ்லிமக்கள்
பெருமளவில் பங்கேற்றனர்.
இந்தியாவிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் யோகாதின பயிற்சியில்
ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆஜ்மீர் தர்கா தலைவர் இது குறித்து கூறுகையில்,
முஸ்லிம்கள் யோகா தின பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இது மத
ரீதியான விஷயம் அல்ல; மனம் மற்றும் உடல் ரீதியிானது. இது குறித்து சில
பழமைவாதிகள் கூறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டாம். யோகா பயிற்சியின்போது
அல்லாவின் பெயரை உச்சரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
Comments