தினமலர் செய்தி : சென்னை: தி.மு.க., பொருளாளர் பதவியை தான் ராஜினாமா செய்யவில்லை என்றும் இது
தொடர்பாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் விளக்கம்
அளித்துள்ளார்.
ஜனநாயக முறைப்படி நடந்து வரும் தி.மு.க., தேர்தல் குறித்து திட்டமிட்டு
பரப்பி விடப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கட்சியில் இருந்து
வெளியேறுவதாக வந்த செய்தி தவறானது.தி.மு.க.,வில் கட்சியின் உயர் மட்ட பொறுப்பான பொது செயலர் மற்றும் தலைவர் பதவியை பிடிக்க மு.க., ஸ்டாலின் விரும்புவதாகவும், தனது பதவிகளான இளைஞரணி பொதுசெயலர், கட்சியின் பொருளாளர் ஆகிய பதவிகளை ராஜினாமா செய்யவிருப்பதாக இன்று செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்து ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
Comments