தினமலர் செய்தி : கராச்சி: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி வரும்
பாகிஸ்தானிற்கு தலிபான் பயங்கரவாதிகள் தற்போது ஒரு எச்சரிக்கை
விடுத்துள்ளனர். கடிதம் மற்றும் வீடியோ மூலம் இந்த மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மிரட்டலில் உயர் அரசியல் தலைவர்கள்
மற்றும் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளை குறி வைத்து கொல்வோம் என்றும் கொடூர
எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது போல் இந்த அமைப்பின் உயர் மட்ட தலைவர்களில் ஒருவரான முகம்மது ஹர்சானி பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். இந்த கடிதத்தில், எங்களின் எதிர் நடவடிக்கை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், உயர் அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளை குறி வைத்து கொல்வோம் . இதில் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பமும் தப்பிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளான்.
Comments