தினமலர் செய்தி : புதுடில்லி: மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் நிலையை கண்டித்து காங்கிரசார்
அக்கட்சி துணை தலைவர் ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த
போராட்டத்தில் பா.ஜ., அரசின் ' யு டர்ன் ' அம்பலம் என வாசகம் பொறிக்கப்பட்ட
பதாகைகளை ஏந்தி வந்தனர்.
பா.ஜ., அரசு அரியணையில் அமர்ந்து 6 மாதங்கள் ஆகிறது. இந்த 180 நாட்களில்
அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காங்., குற்றம் சாட்டுகிறது. பொய்யான வாக்குறுதிகள் ; ராகுல் - இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும், பார்லி., கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற ராகுல் நிருபர்களிடம் பேசுகையில் கறுப்பு பணம் மட்டுமல்ல, மத்திய அரசு என்ன வாக்குறுதிகள் கொடுத்தனவோ எதையும் நிறைவேற்றவில்லை என்றார்.
Comments