தமிழகத்தில் சிறப்பான பணிகள் ஏராளம் ; சட்டசபையில் கவர்னர் பாராட்டு

சென்னை: தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான சட்டசபை முதல் கூட்டம் இன்று கூடியது. இந்த அவையில் கவர்னர் ரோசையா உரை நிகழ்த்தினார். இவரது உரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இலங்கை மீனவர்கள் பிரச்னையில் தமிழக அரசின் செயல்பாடு, புயல் மற்றும் சமீபத்திய அந்தமான் பகுதியில் படகு விபத்தில் சிக்கியோருக்கு தமிழக அரசின் உதவிகள் ஆகியனவற்றை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வறுமை ஒழிப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் மாநில அரசு அரும் பங்காற்றியிருப்பதாகவும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், அனைவரையும் உள்ளடக்கி வளர்ச்சி என்ற கனவு நிறைவேறியுள்ளதாகவும் அவர் தனது பாராட்டில் தெரிவித்தார்.
தொடர்ந்து கவர்னர் பேச்சுக்களின் அம்சங்கள் வருமாறு:

* தொழில் - பொருளாதாரத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது

* 2014- 2015 ஆண்டில் திட்டச்செலவு 42 கோடியே 185 லட்சமாக இருக்கும்

*மாநில உணவு தான்ய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டும்

*அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இது பாராட்டுக்குரியது

*விளையாட்டை ஊக்கப்படுத்த வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் வரை நிதியுதவி

*காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தது பாராட்டுக்குரியது

*காவிரி நிதிநீர் ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் உறுதியான செயல்பாடு

*முதல்வரின் சீரிய நடவடிக்கையால் சட்டம் -ஒழுங்கு நிலை

*மின் பற்றாக்குறையை போக்குவதில் தமிழக அரசு நல்ல நடவடிக்கை

*மாநிலத்தில் வேலைவாய்ப்பு குறித்து ஒரு இணையதளம் உருவாக்கப்படும்

*திருவிழாக்கள், நினைவுநாள் நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.

*வீடுகளுக்கே சென்று பட்டா வழங்கப்படுகிறது.

* 3.72 லட்சம் பேருக்கு விலையில்லா ஆடுகள்

*ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி செய்வதில் முதலிடம்

*போலீஸ் துறை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது

*போலீஸ் துறையில் 24 ஆயிரத்து 503 பேர் கூடுதல் பணியாளர்கள் நியமனம்

*போலீசாரின் தொடர் கண்காணிப்பினால் மாவோ., நக்சல்கள் தளம் அமைக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

*வறட்சி நிவாரண பணிகளுக்கு 1, 614 கோடி ஒதுக்கீடு

* நீண்ட காலம் இலங்கை சிறையில் வாடிய 295 மீனவர்கள் இது வரை மீட்கப்பட்டுள்ளனர்.

*நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பங்கை வாங்கியதில் சாதனை

*முதல்வரின் அறிவார்ந்த தீர்வால் தொழிலாளர் போராட்டம் தவிர்ப்பு

*உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்ட பணிக்கு பாராட்டு

தி.மு.க., வெளிநடப்பு : தமிழக அரசின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வினர் மு.க., ஸ்டாலின் தலைமயில் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து அவைக்கு வெளியே நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில்: தமிழக அரசின் அறிவிப்புகள் மரபு மீறிய செயலாக உள்ளது. முறைப்படி எதுவும் அறிவிக்கப்படுவதில்லை. பெயரளவில் சபைக்கு வெளியே முதல்வர் அறிவித்து விடுகிறார். இதனை கண்டித்து நாங்கள் சபையை புறக்கணித்தோம் என்றார்.

Comments