சென்னை: சென்னையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், மலிவு விலை
காய்கறிக் கடைகளை திறக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும், மூன்று நாள் மாநாடு, சென்னையில், நேற்று துவங்கியது. முதல்வர் ஜெயலலிதா, மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த, இரண்டரை ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும், நிர்வாகம் எட்டியுள்ள சாதனை, திருப்தி அளிக்கிறது.
காய்கறி கடைகள்:
விலைவாசியை கட்டுப்படுத்த, சென்னையில், 40 மலிவு விலை காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற கடைகளை, கலெக்டர்கள், மாவட்டங்களில் தேவையான இடங்களில் துவக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், ஒன்பது தொழிற் பூங்காக்களை, ஒன்பது தென் மாவட்டங்களில், 20,650 ஏக்கரில் துவக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த, 2011, கலெக்டர்கள் மாநாட்டில், 81 அறிவிப்புகளை வெளியிட்டேன். அனைத்துக்கும் உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநாட்டில், 346 அறிவிப்புகளை வெளியிட்டேன். இதில், 332 அறிவிப்புகளுக்கு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எட்டு அறிவிப்புகள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
Comments